எம் ஜி ஆர் பிறந்த நாள்

Posted by admin in செய்திகள் on 17-01-2012

எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்

தோற்றம் 17/1/1917.
பிறந்த இடம் கண்டி – இலங்கை
தந்தை பெயர் திரு. கோபாலமேணன்
தாயார் பெயர் திருமதி. சத்தியபாமா
சகோதரர் பெயர் திரு.எம்.ஜி.சக்கரபாணி
பள்ளியின் பெயர் கும்பகோணம் ஆணையடி பள்ளி.
படிப்பு 3-ம் வகுப்பு
கலை அனுபவம் 7 வயது முதல்
நாடக அனுபவம் 1924 முதல் 1963 வரை – 40 வருடங்கள்
சென்னை வருகை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில்-1932 யானைகவுனி
சென்னையில் முதலில் வசித்த இடம் பங்காரம்மாள் வீதி
திதையுலகில் அறிமுகம் செய்தவர் திரு.கந்தசாமி முதலியார்
திரை உலக அனுபவம் 1934 முதல் 1977 வரை – 44 வருடங்கள்.
நடித்து வெளிவந்த படங்கள் 137 படங்கள்
கதாநாயகனாக நடித்த திரைப் படங்கள் 115 படங்கள்
முதல் படம் வெளியான தேதி 28/03/1936 – சதிலீலாவதி
முதல் வேடம் காவல் துறை அதிகாரி – சதிலீலாவதி
முதல் கதாநாயகன் வேடம் ராஜகுமாரி – ஜுபிடர் நிறுவனம்
100 வது படம் தமிழில்-ஒளி விளக்கு – 20/09/1968
கடைசி படம் வெளியான தேதி 14/01/1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
மறைவுக்கு பின் வெளியான படம் அவசர போலீஸ் 100
அரசியல் அனுபவம் 1933 முதல் 1987 வரை – 55 ஆண்டுகள்
முதன் முதலாக இருந்த இயக்கம் இந்திய தேசிய விடுதலை காங்கிரஸ்
தி.மு.க.வில் இருந்த ஆண்டுகள் 1950 முதல் 1972 வரை
அ.தி.மு.க. துவங்கிய ஆண்டு 1972
தமிழக முதல்வரானது 1977 முதல் 1987 வரை – 11 வருடங்கள்
சென்ற வெளிநாடுகள் மலேஷியா, இலங்கை, பர்மா, சிங்கப்பூர்,ஹாங்காங், பாங்காக், தாய்லாந்து, ஜப்பான்,பிரான்ஸ், கிழக்கு ஆப்பிரிக்கா, லண்டன்,ரஷ்யா, அமெரிக்கா, மொரீஷியஸ்.
மறைவு 24/12/1987

எழாம் அறிவு – ஒரு விமர்சனம்

Posted by admin in செய்திகள் on 28-11-2011

இப்படத்தின்  தயாரிப்பாளருக்கும்  இயக்குனருக்கும் கமராவிற்கும் சூர்யாவிற்கும் முதற்கண்பாராட்டுகள் வாழ்த்துக்கள் இந்திய திரைப்படத்திற்கு
  விமர்சனம் இதுவரையிலும் எழுதவிலலை எத்தனையோ ஆணடுகளை தாண்டிவிட்டன
எழுதகூடாதுயென்று எணணவில்லை  எழுத யாரும் தூண்டவிலலை இந்த எழாம் அறிவு
என்ற திரைப்படம் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களை பாதித்துள்ளது இரண்டு வகையாக தமிழனே தமிழனை இகழ்நதுரைக்கும் நிலைக்கும்  எழாம் அறிவு  திரைப்படம் தேர்வாகியிருக்கிறது
திக்கவைத்துள்ளது இற்றைக்கு 7000 ஆயிரம் ஆண்டுகள் கொண்ட பபிலோமியவரலாறுகளுடன் தொடாபுடையது எமது தமிழன் வரலாறு மெசப்பதோணியவரலற்றை புரட்டியவருக்கு மட்டுமே புரி யூம் மற்றவருக்கு வரலாற்றின் ஆளுமை புரியாது நாம் அவர்களை  பற்றி அலட்டி கொண்டிருக்க தேவையில்லை தேடலில் நுழைவோம்

இந்த எழாம் அறிவு திரைப்படத்தில் என்ன? செய்தியை இயக்குனர்  சொல்ல வருகிறாh;;;ஒரு தமிழன் வரலாற்றை கூற  வருகிறார்  போதிதாமன் என்ற தமிழன் பல வித்தையில் வித்துவானாக யோக ஞானத்தில் சித்தவைத்தியத்தில் வல்லவனாக திகழ்ந்தார்  இந்தபோதிதா;மன் ஒரு தமிழன் தான் என்பதில் யாருககும் மாற்று கருத்து கிடையாது புத்தமதமே உருவானயிடமும் இந்தியாவே ஏனெனில் புத்தன் ஒரு தமிழ் பரம்பரையில் உருவானவர் அவர்  இயற்கை பெயா; சித்தாத்தா; பல தமிழ் பிரபுக்கள் இருப்பதாக சாத்திரங்கள் காட்டுகிறன இப்படி இருக்கையில் திராவிடர்களும் ஆரியரும் இலங்கைக்கு சென்றார்கள் என்ற வரலாற்று கதையூம் திராவிடன்தான் தனியே சென்று  ஆரியனாக பிறந்தாகவும் புத்தமதத்தை மட்டுமே தமிழன்  முதல் தழுவினான் எனவும் பினபுதான் இந்து மதம் பரப்பப்பட்டது என்றும் மோதப்பட்டது என்றும் வரலாறுகள எடுத்துரைக்கபபட்டது; சீனருக்கும் இந்தியருக்கும் என்ன? வித்தியாசம் உண்டு?
 இந்தியாவிலும் நிறைந்த சீனர்கள் வாழ காணமுடிகிறது.  இதில் போதிதர்மன் ஏன்  தமிழனாய் இருக்கமுடியாது  என் வாதம் ஆய்வு இங்கு வைக்கபடுகிறது போதிதர்மன் சிலம்பு அடிவித்தைகள் சித்தவைத்தியத்தில் முண்னணியில் இருக்கிறார்
  இது தமிழனிடம் உருவாகிவந்ததில் மாற்றுகருத்து  இல்லையே சிந்துவெளி நாகரீகத்தையே உலகத்திற்கு கொடுத்த தமிழன்  காம சூத்திரத்தை உலகத்திற்கு கொடுத்தவன் தமிழன் சித்தவைத்தியத்தை உலகத்திற்கு
கொடுத்தவன் தமிழன்
இதையெடுத்து கூறினால் தமிழனுக்கு பொறுக்கமுடியாதுள்ளது எத்தனை சித்தவைத்தியர்கள் வாழ்ந்து மறைந்தார்கள் இந்த உலகத்தில்பிறந்த ஒவ்வொருவனுக்கும் வரலாறு உண்டு தமிழா? உன்னை தவிர தமிழனிடம் இருந்து பெற்றதை வைத்து மேற்கத்தியர் வாழ்கிறார்கள் பெருமைகூறுகிறார்; இசை நடனம் ஞானம் யோகம் சிலம்படி யோகக்கலைஇன்னும் தற்பாதுகாப்பு கலையாக குங்க்பு இன்னும் விரிவாக கூறினால் இந்தியாவில் தோன்றிய புத்தமதம் சீனாவில் ஏன் தோன்றியது? ஏன்று கேட்டுப்பார்த்தோமேயானால் விடை போதிதர்மன். தமிழன் தமிழன்தான்  விடைகிடைக்கும்; இந்தியாவில்தோன்றிய புத்தமதம் படிப்படியாகு சீனா செல்ல காடுகள் மேடுகளை கடந்து இநத
குங்க்பு போனற மாபெரிய கலையும் தற்ப்பாதுகாப்பிற்காக புத்தருடன் சேர்ந்து சென்றிருக்கிறது யூடொ கராட்டி சிலம்படி இவையொல்லாம் தமிழனுடையது என்று மேற்கத்திய விளையாட்டு வீரர்களுக்கு குங்க்புவும்
இந்த யூடொ கராட்டே படிப்படியாக யப்பனில் யூழைந்து மெருகுவூட்டபட்டது இன்று சிலம்படியை மலையாளமக்களின் தெய்வீக கலையாக உணரப்படுகிறது
தமிழா  நீ ஒவ்வொன்றாக தொலைத்தாய் இன்றும் தொலைத்ததை மீட்டி பார்க்க  உன்னால் முடியவில்லை நீதான் விலைபோய்விட்டாயே நீ விலைபோனது பரவாயில்லை எம்வரலாற்றை விற்காதே?
 பரதகலையை தாசிகள் கலையாக வர்ணித்து அசிங்கபடுத்தி அதைமீண்டும் இலங்கையைசார்ந்த கோபாலகிருஸ்ணன் என்பவரால் உருக்குமணிதேவி என்ற ஆசிரியராலும் மீண்டும்  காப்பாற்றபட்டுள்ளது  சேரன் சோழன் பாண்டியன்  காலத்து கலை அரசனுடைய மனைவிகூட இக்கலையைபயின்றுள்ளார்  என்ற பெருமையூம் நடனகலைக்கு உண்டு இன்னும் கிட்டார் வீணை
நாதஸ்வரம் மிருதங்கம் புல்லாங்குழல் இவை இந்தியகலைதான் இதில் ஒவ்வொன்றும் கிந்திகாரருடையது மலையாளத்தாருடையது தெலுங்குகாரருடையது தமிழருடையது இன்று பிரிக்கமுடியாது

மலையாளம் தெலுங்கு கர்நாடகம் இவர்கள் தமிழில் இருந்து பிரிந்தவார்களே இல்லை அவார்கள் கூறுவார்கள் அவர்களில் இருந்து தமிழன் பிரிந்தான் என்று இரண்டும் ஒன்றுதான் விடை ஆகவே வரலாற்றை தொலைத்து
இன்று சீனாநாட்டிற்கு கொடிபிடிப்பவராக நாம் எங்களை நினைத்து இன்றாவது வெட்கபடுவோம்

பரதகலை சிற்பகலைகட்டிடகலை கவிதைகள் நாடகம்   இப்படி கூட்டிகொண்டு போகலாம் எமது பெருமைமை நாம் கூற ஏன் எமக்குள்ளே தடை நாம் மற்றவருக்கு பின்னால் குடைபிடிக்கிறோம்
 கும்பிடு போடுகிறோம்  உலகதில் பழமைவாசிகள் நாம் பெயர் சொல்லபடவேண்டியவர்கள் இன்று அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம் ஏன்? உன் வரலாறு உனக்கு தெரியாது உன்னை நீ விற்றுவிட்டாய்
 மஞ்சல் கருவேப்பில்லை இஞசி பூடு துளசி மல்லி சிரகம் பெருங்காயம் கடுகு இவையொல்லாம் தமிழன்;  ஆதிகாலத்தின் உணவாகவூம் வைத்தியத்திற்காகவூம் பயன்படுத்தபட்டது மஞசல் கருவேப்பில்லை அரைத்து éசுவது தொற்று நீக்கிகள் நீக்கவேயென இதை தியாக ஏழாம் அறிவூ படத்திலும ஆசிரியர் அருமையாக நாசுக்காக கிள்ளிவிடகிறாh;  மஞசல் மருந்திற்காகவூம் உணவிற்காகவூம் தொற்றுநிக்காவம் பயன்படுகிறது இன்றும் கருவோப்பிள்ளை தடவினால் கிருமிஅழியூம் இவைசித்தவைத்தியம்  இந்தியாவில் சித்தவைத்தியா;கள் அத்தனைபேரும் தமிழா;கள் இதைகூற தழிழனுக்கே நெஞசு பொறுக்குது இல்லை ஊட
ஊடகங்கள் கிடைத்தால் உங்கள் கருத்தை புதைக்கவேண்டாம்!

 தேடல்செய்து இல்லை தேடல் செய்பவரை தட்டிகொடுங்கள் இதுவே ஊடகதா;மம் ஏழாம் அறிவூபடத்தில் ஆசிரியர் எத்தனையோ ஆயிரம் மக்கள் பார் கும் படத்தை எடுக்கிறாh; என்றால் சாதாரணமாக படத்தை நாம் விமா;சிக்கமுடியாது இலங்கையிலே இப்படம் சர்ச்சைக்கு உள்ளாகி சா;ச்சைக்குள்ளான வாpயை தடைசெய்து இலங்கை மக்களுக்கு காண்பிக்கபட்டது இது கூட பட ஆசிரியர் வெற்றியே ஒரு சமுதாயத்தில் நடக்கும் ஊழல்களை வெளிப்படுத்துவதே நல்ல இலக்கியம் என்போம் அந்த நல்ல சமுதாயசிந்தனையை எடுத்துகாட்டியூள்ளாh; ஏழாம் அறிவூபடத்தில் ஆசிரியர் இதைத்தானே கூறவந்தார் 

சீனாவில் வந்த தொற்று நோய்க்கு மாற்று மருந்து போட்டு போதிதர்மன் சித்தவைத்தியத்தை சீh;படுத்தியிரந்தாh; அதே தொற்று நோய் இந்தியா ஏன் போகாது சீனாவின் வந்த தொற்று நோயை பரப்ப ஒரு ஊசிபோதுமே? இப்படிதானே ஆசிhpயா; எடுத்துகாட்டினாh; அடுத்து போதிதா;மன் நஞசு அருந்தி இறந்த பின்பு சீனாவில் அடக்கம் செய்யப்பட்டாh; இதன் பின் இவா; போல ஒருவா; இருக்க பிறக்க ஏன்? சாத்தியம் இல்லை ;இருக்கு மரபு அணுகளின் செயல்பாட்டின் இருந்து கண்டுபிடிக்கபடும்யென எத்தனையோ ஆய்வூகள் வெளிவந்து விட்டன பல வருடங்களுக்கு முன்பு  இது புதிதுவல்ல இந்தியரு ஏற்கனவே மரபுணுககள் பற்றிஆய:வூ செய்து
வெற்றிபெற்றவா;கள் அந்த ஆய்வானது  மரபுவழி நோய்கள் பற்றியது இதை ஆய்வூ செய்தவா; தமிழ்
;நாட்டை சார்ந்தவா; லண்டன் கேம்பிறிஸ் பல்கலைகலகத்தில் கல்விகற்றவா; ;இந்த  ஆய்வில்கண்டுபிடிக்கபட்டதாவது
தீராவிடயினமே முதல்முதல் குடியேறிய மக்களாவா;யென கண்டபிடிக்கபட்டது மேற்கத்திய ஆய்வின்படி மரபுவழிமுறையிலே பல நோய்கள் வரகாரணமாகிறது இதனால் ஒரு பிள்ளை பிறந்தவூடனேயே டாக்டர்கள்
பாட்டன்பாட்டி என்ன? நோய்யிருக்கு  என்று கேட்டு அப்படியீருந்தால் அதற்கான தடுப்பு  ஊசிபோடப்படுகிறன இது மரபுவழிநோய்கள் இயல்புகள் வரசாத்தியம் உண்டுயென நிறுபனமாக்கப்பட்டது
இலண்டனில்  இன்னும் சட்டத்தில் இருக்கும் முறை ஒரு கொலைகுற்றம்  சட்டவிரோ செயலில் ஈடுபட்டிருந்தால் அவருக்கு பிறக்கும் பிள்ளை நல்ல தொழிலும் செய்யமுpடியாது நல்லபல்கலைபடிக்கமுடியாது
இது ஏன்  ஒருதந்தையின் உயிரணுக்களில் பிறந்த பிள்ளையூம் அதைத்தான் செய்யூம் என்பது ஆய்வாளாhpன் முடிவூ இதைத்தான் ஏழாம் அறிவூபடத்தில் ஆசிரியர் முரகதாஸ் கூறவந்தவிடயம்
போதிதா;மன் சீனா போய்  நஞ்சு அருந்தி மாண்டாh;ஆனாலும் ; இறைவனாக வணங்குகிறாh;கள் சீனா;கள்
இதுவம் போலிதன்மைதான் எதுவாமனாலும் இப்படத்தில் தமிழா; வரலாறு  காட்டபட்டது இதை சாpயா பிழையாயென நிh;ணைக்கவேண்டியவா;கள்  தமிழ்மக்கள்  சினமகனல்ல இங்கு பல தமிழ் மகன் சீனமகனாய்
மாறிவிட்ட உண்மை கதையூம் அறிவோம் என்ன? சேய்ய வரலாற்றை தொலைத்தவரும் தொpயாதவரும்
தொpந்தும் மாற்றுகட்சிக் குடைபிடிப்பவரும்  என்செய்வோம்  பழங்குடிமகன்வரலாற்றை தொலைத்து நிற்கும்
சோகமான நிலை உலகத்தில் தமிழன் ஒருவனுக்கே! ஓரவிமா;சனத்தை எடுத்துவரும்போது அது சாpயாவென தேடில்செய்யவேண்டும் சீனாவென்று ஏழாம் அறிவில் படம்எடுத்துவிட்டால் விமா;சிக்கமுடியாது
தமிழன் தான் வழிவந்த  கலாச்சார் விளிமியங்களை மேற்கத்திய நாடுகளிளும் கற்றுகொடுக்கிறா; உதாரணமாக யோகக்கலை உலகில் எல்லாபகுதிகளிலும் கற்றபடுகிறது சித்தவைத்தியமும் அப்படியே
நவீனவைத்தியத்தில் நம்பிக்கை குறைந்து மூலிகைகளில் நாட்டம்கூடிவிட்டது pகூடிவிட்ட நிலை மேற்கத்தியா;கள் இந்தியா சென்று ஞானம் யோகாசனம் சிலம்படி சித்தியவைத்தியம் கராம்போட் இன்னும்
அதிவிதமான கலைகளை கற்று மேற்கத்தியநா ட்டில் வந்து தம் மக்களுக்கு கற்பிக்கிறா;h இநத வெட்கமான
செயல் எம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இது புதிய விடயம் இல்லையே! மேற்கத்தியருக்கு இது புதிய விடமல்ல ஏழாம் அறிவூபடத்தில் போட்டுதான் நாம் அறிய வேண்டுமா? ஆறியாதவருக்க இயக்குனர்  அறிய தந்தார்  இது கூட தெரியாது ஏழாம் அறிவு படத்தை பார்த்தாவது திருந்தவேண்டும் என்பது இயக்குனருடைய ஆதங்கம் அந்த ஆதங்கத்தையூம் உடைத்து எறியூம் தமிழ்மக்கள்  தமிழரா….நீங்கள் முதலாழிதத்துவத்தை அழிக்கவேண்டும் என்று வாதாடும் பல தமிழன்  மறைமுகமாக வளர்த்து கொண்டிருக்கிறாh;கள் என்பது தெளிவு  எதுஎப்படியோ? உன் வரலாற்றை தொலைக்காதே! சீனாவைப்பற்றி நாம் கொச்சபடுத்தவில்லை வரலாற்று கதையை இயக்குனர் கூறினார் ஏழாம் அறிவு படத்திற்கு முதலே அறிவோம் எம் வரலாற்று கதையை ஆகவே  சமுகவிரும்பிகளே ஆய்வாளரே! வரலாற்று வாதிகளே
யாருக்கு பின்னாலும் கொடிபிடிப்பதை விடடு விட்டு சுயமாக சிந்தியுங்கள் ஏழாம் அறிவூபடத்தில் இயக்குனர்   கடைசியியாக கூறியது 9நாடுகள் சேர்ந்து ஒருநாட்டை அடித்தது துரொகசெயல் என்று  அது சமுதாயசிந்தனை நோக்கு ஆனால் சமுதாயசீரழிவாளான் நோக்கு அப்படி அடித்தது சரி அப்படி அடிக்கவிட்டால் இன்னும்
உயிர்கள் அழிந்திருக்கும் என்று ஒன்பது நாடும் சேர்ந்து அழித்ததில் 40ஆயிரம் உயிர் அழிந்து 40ஆயிரம் ஊணமுற்றவார்கள் 40 ஆயிரம் விதவைகள் ஆனாதையாக்கப்பட்ட கணக்கு உங்களுக்கு வேண்டுமா உங்களுக்கும் மனிதநேயத்திற்கும்  ஐனநாயகத்திற்கும் என்ன சம்பந்தம்…..இதுதான் இன்றைய கேள்வி பயங்கரவாதத்தை அழிக்க அப்பாவி மக்கள் அழிக்கபடவேண்டுமா? இதை உலகமே தட்டிகேட்கும் போது ஏழாம் அறிவு படத்தில் முருகதாஸ் அவர்கள்  கேட்டதில் நியாயமான கேள்வியே அர்த்தமுள்ள படமே நடித்தவர்கள் இயை இயக்குனா; தயாரிப்பாளா;  சபாஸ்போடவேண்டும் சமுதாயத்தில் நடக்கும் ஊழல்களை தட்டிகேட்பதும் உண்மைகளை எழுதுவதுமே நல்ல சிந்தனையாளன் அவர்களை வரவேற்போம் அன்புடன் கவின் மலர்

நன்றி சொல்ல வேண்டும்.

Posted by admin in செய்திகள் on 29-10-2011

இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு பௌத்த பிக்குகள் நன்றி தெரிவித்துள்ளனர். அவுஸ்ரேலியாவில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்ஷவை காப்பாற்றியதற்காக சிங்கள ராவய என்ற பௌத்த பிக்குகளைக்கொண்ட அமைப்பு அவுஸ்ரேலியா அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலிய அரசாங்கம் தக்க தருணத்தில் தமது தலைவரையும் நாட்டையும் காப்பாற்றியுள்ளதாகவும் அவர்கள்; தெரிவித்துள்ளனர். கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்திற்கு சென்ற இந்த அமைப்பைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் அவுஸ்திரேலிய தூதுவரிடம் மகஜர் ஒன்றை வழங்கியதுடன், தமது அமைப்பின் சார்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்

அடுத்த இலக்கு ஈரான்?

Posted by admin in செய்திகள் on 28-10-2011

இரானை நிஜமாக யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதில் குழப்பம் நிலவுவது இரானிய அரசாங்கத்துடன் உறவாட அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளைப் பாதிக்கின்றன என்று அமெரிக்க ராஜாங்கச் செயலர் ஹில்லரி கிளிண்டன் பிபிசி பெர்ஷியன் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.”அதிபர் ஒபாமா ஆட்சிக்கு வந்த உடனேயே தான் இரானிய ஆட்சியாளர்களுடன் பேசுவதற்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் முயற்சி எடுக்கத் தயார் என்பதை தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால் அந்த நாட்டில் யார் முக்கியமான முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதையே புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. ஆதலால் அதிபர் ஒபாமா முயன்றிருந்தும் பலன் ஏற்படவில்லை” என்று கிளிண்டன் குறிப்பிட்டார்.இரான் ஒரு இராணுவ சர்வாதிகாரக் கட்டமைப்பாக உருமாறிவருகிறது என்று தான் நினைப்பதாக அவர் கூறியுள்ளார்.இரானிய அரசாங்கத்துடன் உறவாட முயன்று பலன் தராத நிலையில், இரானிய மக்களுடன் வேறு வழிகளில் உறவாட அமெரிக்கா முயற்சிகள் எடுத்துவருவதாக கிளிண்டன் தெரிவித்தார்.அந்த நோக்கத்தில் இரானிய மக்களுக்கென ‘இணையத்தில் அமைந்திருக்கக்கூடிய தூதரகம்’ ஒன்றை இந்த வருஷக் கடைசிக்குள் அமெரிக்கா ஏற்படுத்தவிருப்பதாக ஹில்லரி குறிப்பிட்டார்.

வருக…வருக…

Posted by admin in செய்திகள் on 27-10-2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துடனான பேச்சுக்களை நேற்று ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகின்றதுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த திரு. இரா. சம்பந்தன், மாவை. சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றிருந்தனர்.அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு நேற்று காலை 9.20 மணியளவில் சென்றடைந்த அவர்கள் நால்வரும் அதிகாரிகளால் வரவேற்கப்பட்டு பேச்சுவார்த்தைகளிற்காக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எஜமானியின் உத்தரவு….. பயணித்தது கூட்டமைப்பு….

Posted by admin in செய்திகள் on 24-10-2011

அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரடங்கிய குழு இன்று மாலை வாஷிங்டன் பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுஇந்தக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.அமெரிக்காவிற்கான விஜயத்தை முடித்துக் கொண்டு கூட்டமைப்புக்குழு கனடாவின் டொரண்டோவுக்கு விஜயம் செய்யது கனடாவில் அரசதரப்பு பிரதிநிதிகளை சந்திப்பதுடன் கனடாவில் தமிழ் மக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சியிலும் பங்குபற்ற உள்ளதாக அவர்களது பயண நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇந்த கூட்டமைப்புக் குழுவில் ரெலோ மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி, புளொட் ஆகிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஓரங்கட்டப்பட்டு அரசியலுக்கு தொடர்புகளற்ற நியமன உறுப்பினரான சுமந்திரன் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அரசியல்அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எய்க்கலாம் பிறகு ஏற்கலாம் – எம்.ஏ.சுமந்திரன்.

Posted by admin in செய்திகள் on 04-10-2011

அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் சில இடைக்காலத் தீர்வுகளைக்கூட ஏற்கவேண்டி வராலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.நோர்வே அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்காக நோர்வேக்கு விஜயம் செய்துள்ள அவர் தற்போதைய பேச்சுவார்த்தைகள் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் தற்போது நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் மூலம் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காணப்படவேண்டும் எனவும், பேச்சுவார்த்தையில் உடனடியாகத் தீர்வு கிடைக்கும் என்பது எல்லோரும் எதிர்பார்க்கக்கூடிய காரியம் இல்லை என்பதால் சில இடைக்காலத் தீர்வுகளைக்கூட ஏற்கவேண்டி வரலாம் எனவும் அவர் கூறினார்.

வெற்றி விழா…

Posted by admin in செய்திகள் on 21-08-2011

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண வைபவம் நேற்று காலை 11.00 மணியளவில் நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நேற்று தமது சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்து இரா.சம்பந்தன் அதனை ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், எஸ்.ஸ்ரீதரன், அ.விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதராதலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன், பொன்.செல்வராசா உட்பட மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பிரமுகர்கள் உட்பட பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்

யாழ். உளளூராட்சி தேர்தலை கண்காணிக்க அமெரிக்க அதிகாரி யாழ்ப்பாணம் வருகை!

Posted by admin in செய்திகள் on 14-08-2011

யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள உளளூராட்சி தேர்தல் தொடர்பாக நேரில் ஆராய்வதற்காக அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அலுவலர் ஜோன் எம் டெஸ்ரெர் நேற்று யாழ்ப்பாணம் சென்று அரச அதிகாரிகள், மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோரை சந்தித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், உதவித் தேர்தல் ஆணையாளர் ஆ.சு.கருணாநிநி ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது தேர்தல் கால பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமெரிக்க தூதரக அரசியல் அலுவலர் கேட்டறிந்துகொண்டார் ஆளும் கட்சியினரும், படையினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்களையும் அச்சுறுத்தல்களையும் விடுத்து வருவதையடுத்து நிலமைகளை நேரில் அறிந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.

அன்று புலிகளின் விமான ஓடுபாதை….இன்று புதிய பாவனை…

Posted by admin in செய்திகள் on 10-08-2011

விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு, இரணைமடு விமான ஓடுபாதைகள் புனரமைக்கப்பட்டு வர்த்தக விமானப் போக்குவரத்துகளை மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா விமானப்படை கூறியுள்ளது. விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட கிளிநொச்சி ஓடுபாதையை புனரமைத்து வர்த்தக விமானப் போக்குவரத்தை ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ள சிறிலங்கா விமானப்படையின் பேச்சாளர் குறூப் கப்டன் அன்ரூ விஜேசூரிய, இரணைமடு, முல்லைத்தீவு ஓடுபாதைகளும் விரைவில் புனரமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இவற்றையும் வர்த்தக விமானப் போக்குவரத்துக்கு பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா விமானப்படை ஏற்கனவே பெல்-212, பெல் 412 உலங்குவானூர்திகள், வை-12 விமானம் ஆகியவற்றின் மூலம் வர்த்தக விமான சேவைகளை காங்கேசன்துறை, அம்பாறை, திருகோணமலை, அனுராதபுர, பலாலி உள்ளிட்ட பல இடங்களுக்கும் நடத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.